முகப்பு » கட்டுரைகள் » தில்லி தமிழ்ச் சங்க பவளவிழா மலர்

தில்லி தமிழ்ச் சங்க பவளவிழா மலர்

விலைரூ.0

ஆசிரியர் : என்.கண்ணன்

வெளியீடு: டில்லி தமிழ்ச் சங்கம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
புதுடில்லி தமிழ் சங்கத்தின் பவளவிழா மலர், பிரபலங்களின் வாழ்த்துரையுடன் கச்சிதமாக வெளிவந்துள்ளது. ஏழு பெருந்தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்த்துரை துவங்கி, டில்லி தமிழ் சங்க பதிப்புகள் வரை ஒரு பொருளில் தரப்பட்டுள்ளன.

அடுத்து, சங்கத்தின் தமிழ் மலர்களில் பூத்த கட்டுரை மலர்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. மலர்களில் வெளிவந்த பழைய கட்டுரைகள் இதில் அணி வகுக்கின்றன. தொடர்ந்து, கவிதைகள் வலம் வருகின்றன.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நவீன சிந்தனையுடன் பல கட்டுரைகளும் அமைந்துள்ளன. இறுதியாக சங்கத்தின் புனிதப்பயணம், புகைப்படங்கள் வாயிலாக காட்டப்பட்டுள்ளது. படித்து, பாதுகாக்க ஏற்ற அறிவுக்களஞ்சியமாக விளங்கும் மலர்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us