முகப்பு » கவிதைகள் » அவளுக்கு ஏனோ... என்னைப் பிடிக்காது

அவளுக்கு ஏனோ... என்னைப் பிடிக்காது

விலைரூ.110

ஆசிரியர் : நா.தட்சிணாமூர்த்தி

வெளியீடு: அம்பீஷியா பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காதலை மையமாக கொண்ட கவிதை நுால். அனுபவங்களின் புனைவாக படைக்கப்பட்டு உள்ளது. பசியின் கோர முகத்தை வரிகளில் காட்டுகிறது. ‘காதலில் மட்டும் தான் வெற்றிக்கும், தோல்விக்கும் ஒரே பரிசு கவிதை’ என்கிறது. ‘கைரேகை மட்டுமல்ல; என் காதலும் உன்னைத் தவிர வேறு யாருடனும் ஒத்துப்போகாது’ என காதலை உணர்த்த முயல்கிறது. ‘எனக்கு வேறு ஒரு மகள் கிடைப்பாள்; இன்னொரு தாய் கிடைப்பாளா?’ என தாய் பாசத்தை பிணைக்கிறது.

‘பிணம் போகும் பாதையில், மலர் துாவும் மனிதர்களே; இரண்டு மனம் போகும் பாதையில் மலர் துாவ மறுப்பது ஏனோ’ என, காதல் எதிர்ப்பாளர்கள் மறுப்பை பேசுகிறது. வாசித்து நேசிக்க வேண்டிய கவிதைகள்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us