முகப்பு » ஆன்மிகம் » நம்மாழ்வார்

நம்மாழ்வார்

விலைரூ.230

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கயிற்றில் வித்தைக் காட்டும் கழைக் கூத்தாடி போல எழுத்தில் வித்தை காட்டும் நுால். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா... என் கூட்டுக்காரா ஆச்சார்யா கதா பாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, ஆன்ம ஞானம் தருபவனை, அலங்கார பூஷிதனை நேசிக்க கோவிலுக்குச் செல்லும் நம் மனம்... அழகற்ற, புற உணர்வற்ற, புறந்துாய்மையற்ற ஒருவன் மேல் பரிதாபம் கொள்கிறது எனில் மனமும் கோவில் தான்.

அன்பும், ஆன்மிகமும் சார்ந்து இருக்கிறது என்பதை, தலைமை அர்ச்சகர் மனதின் வாயிலாக உணர வைக்கிறது. ஆண்டவன் மேல் காட்டும் அன்பை விட, அடியார்கள் மேல் காட்டும் அன்பு உன்னதம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. அன்புக் குறைவை அன்பு சோகை என்று அழகாக விளக்குகிறார்.

கவிஞனும், கைதியும் ஆழ்வார் பாசுரத்திற்குள் ஒன்றி தொலைந்த கதை இன்னும் மனதை மேம்பட வைக்கிறது. இடையில் வைக்கவிடாமல் முழுதுமாக படித்து முடி என்று துரத்திக் கொண்டிருக்கிறது ஆசிரியரின் கைவண்ணம். புத்தகத்தை படிக்கும் போது மனம் பாசுரங்களால் நிரம்பி வழியும்.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us