முகப்பு » கட்டுரைகள் » தண்ணீர்... கண்ணீர்...!

தண்ணீர்... கண்ணீர்...!

விலைரூ.320

ஆசிரியர் : நடுவூர் சிவா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘இதற்காகத்தானா மெனக்கெட்டாய் தமிழா’ என்ற தலைப்பில், ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். பண்டை காலத்தில் நீர் மேலாண்மையை கையாண்ட விதம், நீர் பங்கீடு அமைப்புகள் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளன.

குளங்கள், கண்மாய்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டன; மேலாண்மை செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்கள், ஆராய்ச்சி நுால்களில் வெளிவந்துள்ளன. மழைநீரை சேகரிக்க, சுரங்க நீர்த்தேக்க தொட்டிகள், நீரேற்றம் செய்தல் போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்த செய்திகள், தற்போதுள்ள நீர் தேவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறை, ஆலோசனைகளாக அமைந்துள்ளன.

காவிரி வடிநிலத்தில் உள்ள பிரச்னைகள், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பின்படி கர்நாடகா அளிக்க வேண்டிய நீர் அளவு ஆகியவற்றை பற்றியும் குறிப்பிட்டுள்ளது. நீர் தேவையை பூர்த்தி செய்யும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் நுால்.

இரா.சுப்பிரமணியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us