தமிழ் வரி வடிவங்களை வித்தியாசமான நோக்கில் விளக்கியுள்ள நுால். நாவல் போன்று விரிந்து கதை சொல்வது போல அமைந்து கருத்தை உணர்த்துகிறது. எழுத்து பற்றிய ஐயங்களுக்கு விடை சொல்வது போல எழுதப்பட்டுள்ளது. 28 குறியீடுகள் மூலம் தமிழ் எழுத்து வடிவத்தை விளக்குகிறது. தமிழ் எழுத்துகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள, 28 குறியீடுகளால் எழுத முடியும் என்கிறது.
முன்பே இது போன்ற கருத்துகளை சொல்லியிருப்பினும், அதன் தொடர்ச்சியை ஆராய்ந்து எளிமையாக விளக்கும் நுால்.