தசாவதாரம்

விலைரூ.100

ஆசிரியர் : பி.எல். முத்துக்குமரன்

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பத்து அவதார புராண நிகழ்வுகளையும், சிறப்பையும் தெளிவான நடையில் எடுத்துரைக்கும் நுால். பிரம்மதேவனிடமிருந்த, அசுரர்களால் திருடப்பட்ட, வேத நுால்களை மீட்டு வருவதற்காக எடுத்த மச்ச அவதாரம், பாற்கடலுள் மூழ்கிய மந்திரகிரியை துாக்கி நிறுத்திய கூர்ம அவதாரம் போன்று வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன் என ஒன்பது அவதாரங்களின் நிகழ்வுகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

கலியுகத்தில் சம்பளம் என்ற கிராமத்தில், விஷ்ணு கீர்த்தி என்ற அந்தணருக்கு, குழந்தையாகப் பிறந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவார்; அத்துடன் கலியுகம் முடிவுற்று, மீண்டும் கிருதயுகம் தொடங்கும் எனச் சுட்டப்பட்டுள்ளது.

தசாவதாரத்தின் அரிய தத்துவங்களை எளிய நடையில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தெய்வீக மணம் கமழும் வைணவ ஒளி வீசும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us