சம்பவங்களை கற்பனை கலந்து கதையாக வடித்துள்ள நுால். கோவிலில் உள்ள பொருட்களை வைத்தே கடவுள் இல்லை என்று கோவில் சுவரில் எழுதுதல், தெருவைத் தேடி அலைந்த அனுபவம், நடிகையின் கணவனின் புலம்பல் போன்ற கருக்களை கொண்டுள்ளது.
தந்தையின் பரிவு, பதவி உயர்வு கிடைக்கவில்லை என பெட்டிக்கடை வைத்தவரின் அலங்கோலம், இப்படியாக கருத்துகளை கொண்டுள்ளது. கதை ஓட்டம் ஒரு அனுபவத்துடன் பிணைந்திருப்பதை உணரலாம். அந்தந்த கால சூழ்நிலை, மனித மனநிலையை ஒட்டி அமைந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பு பலரை இளமைக் காலத்திற்கு கொண்டு செல்லும்.
– இளங்கோவன்