வரலாற்றில், இலக்கியத்தில், கோவில்களில் கங்கை நதி பற்றிய குறிப்புகளை தொகுத்து தரும் ஆய்வு நுால்.
கங்கை நதியின் தோற்றம் முதல் சங்கமம் வரை தகவல்களை படத்துடன் முதலில் காட்டுகிறது. அந்தந்த பகுதி கோவில் சார்ந்த செய்திகளையும் தெளிவாக தருகிறது. அடுத்து இதிகாசங்களில் கங்கை பற்றிய குறிப்புகள், தமிழ் இலக்கிய படைப்புகளில் கங்கையை சித்தரித்துள்ள விதம் துல்லியமாக உள்ளது.
மாமல்லபுரம் சிற்பங்களில் உள்ள கங்கை தகவல்கள் வியப்பூட்டுகின்றன. கங்கை நதியை ஒருமுகமாக சிந்திக்கத் துாண்டும் நுால்.
– ஒளி