நோய்களுக்கு தேவையான மருந்து, சுற்றியுள்ள தாவரங்களில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
குறிப்பிட்ட பகுதியில் மூலிகைகள், எத்தகைய நோய் வரப்போகிறது என்பதை, அந்தக் காலத்தில் வைத்தியர்கள் உணர்ந்து விடுவர். மருத்துவ தன்மை கொண்ட மகத்தான மூலிகைகளை விவரிக்கிறது. சில மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகளை தெரிந்து கொண்டால், நுால் எந்த அளவு பயனுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மலச்சிக்கல், பசியின்மை, பல் சொத்தையை குணமாக்கும் நாயுருவி, வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் திருநீற்றுப் பச்சிலை, எளிதில் கிடைக்கும் கீரை வகைகளே சிறந்த மருத்துவக் குணங்கள் நிறைந்த மூலிகைகள் என்பதை விளக்கும் அற்புத நுால்.
–- இளங்கோவன்