ஒருவனால் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் முடிக்க முடியுமா... ஒருவனால் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து காட்ட முடியுமா... ஒருவனால் நில மோசடி, குழந்தை கடத்தல் என மோசடிகளை செய்ய முடியுமா...
அத்தனை கேள்விகளுக்கும் விடை தரும் நாவல். இது மாதிரி செயல்களால் நாடு கெட்டுப் போவதாக கூறி, இயற்கையே பழிவாங்கி விடுவதாக முடிக்கப்பட்டுள்ளது.
நாடகங்களில் பாத்திரங்களை அறிமுகம் செய்வது போல எளிமையாக உள்ளது.