சந்தங்கள் நிறைந்த நயங்களோடு பாடப்பட்டுள்ள காவிய நுால். பாரிவேந்தரின் வாழ்வை 20 தலைப்புகளில் விவரிக்கிறது. இளமையில் வறுமையை இடையறாத உழைப்பால் வென்ற தன்னம்பிக்கையை போற்றுகிறது.
கவிதையில்,‘சோதனைகள் நெருப்பெனவே சுட்ட போதும், சுடச்சுடரும் பொன்னாகும் துணிந்த நெஞ்சம! வேதனையாம் மேகங்கள் மறைத்த போதும் வெண்ணிலவாய் ஒளி வீசும் தெளிந்த ஞானம்!’ என்கிறது.
‘வரலாறு படைத்தவர்கள் நடந்து வந்த வாழ்க்கையதன் பாதையினை திரும்பிப் பார்த்தால் கரடு முர டென்றேதான் காணக்கூடும் காலிடரும் தடைக்கல்லைப் படிகல் லாக்கி, வரமாகச் சாபத்தை மாற்றிக் காட்டி...’ என முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு தன்முனைப்பு ஊட்டி வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்