நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு பற்றி விவரிக்கும் நுால். பொருளாதாரத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு தார மணம் எப்படி சீராக்குகிறது என்பதை தெளிவாக, துணிச்சலாக விவரிக்கிறது.
முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற எதிரெதிர் துருவங்களைக் கொண்ட கொள்கைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற மண நடைமுறையை சிதைத்தன. அவை, நாட்டின் பொருளாதாரத்திலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது.
பலதார மணம் வன்முறைக்கும், சுயநலத்திற்கும் வழிவகுத்து பொருளாதாரத்தையே சீரழிக்கிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
– இளங்கோவன்