கதை கேட்பதென்றால் குழந்தைகளுக்கு பிடிக்கும். பொழுதுபோக்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவுரையும் சேர்ந்திருந்தால், கசப்பு மருந்தை வெல்லத்தில் வைத்து கொடுப்பது போல் இனிக்கும். இந்த கதைகளை குழந்தைகளுக்கு கூறியவர் ஜெயேந்திர சுவாமிகள். சில முத்துக்களை பார்ப்போம்...
* அம்மா, அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்திருக்கா. அவாளை எந்தக் காலத்திலேயும் கைவிடாம, பத்திரமா பாதுகாத்து, முடியாம போகும்போது உறுதுணையா இருந்து ஆதரவு தரணும்
* வாக்குன்னு கொடுத்தாச்சுன்னா அதை எப்பாடு பட்டாவது காப்பாத்தி தான் தீரணும்.
நன்முத்துக்களை புத்தகம் முழுதும் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம்.
– இளங்கோவன்