மானுட பரிணாமத்தை கவிதை மொழியில் சொல்லும் கருத்து நுால். எளிய நடையில் நாகரிகம் கடந்து வந்த பாதையை இயல்பாக சித்தரிக்கிறது. இடையில் ஏற்பட்ட சறுக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறது.
மனித பரிணாமத்தை மிக சுருக்கமாக, ‘உடலொரு வளர்ச்சி மனமொரு வளர்ச்சி கண்டதைப் போல் மூளையிலே செயல் வளர்ச்சி கண்டானே...’ என, பறைசாற்றுகிறது. சறுக்கல்களை, ‘வளர்ச்சி வளரா இடமதிலே... வாழ்ந்தென்ன பயனென்று நொந்திருந்து...’ என வருத்தமடைகிறது.
மக்களாட்சி அரசியல் என்ற தலைப்பில், ‘கருப்பு பணமாய் சேர்த்தனரே கள்ளப்பணமும் புழக்கத்திலே... கட்சிகள் அறியாமலா...’ என உண்மையை உடைக்கிறது. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்கி சிந்தனையாக வெளிப்படுத்தும் நுால்.
– ஒளி