வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு போல் தெரிந்தாலும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மிகத் தகவல்கள் வியக்க வைக்கும் நுால். அபிராமி அந்தாதியின் சில பாடல்களை தேர்வு செய்து, விளக்கத்தை வெறுமனே கூறாமல் கதை போல ஒரு சம்பவத்தை விவரித்திருக்கும் பாங்கு மிக அருமை.
பாடல் மனதில் பதிகிறதோ இல்லையோ, உதாரண சம்பவம் மனதை விட்டு என்றென்றும் அகலாது. ஆன்மிகத் தேன் துளிகளில் சில சிதறல்கள்:
மரணம் என்பது கர்ம பலன்படி நிகழக்கூடியது; அதை தடுக்க நினைப்பது முட்டாள் தனம். செய்வினை நாம செய்யும் வினை தான். அதற்குப் பரிகாரம் அபிராமி அந்தாதி. துன்பம் வேண்டாம் என்றால், அடுத்தவருக்கு செய்யாமல் இருப்பது சிறப்பு.
-– இளங்கோவன்