அன்பின் ஆழத்தை புரிய வைக்கும் அற்புதமான கதை நுால்.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி, ‘அன்பென்னும் பாடத்தை நீ ஒரு பெண்ணிடம் கற்றால் தான் என்னைப் பற்றித் தொடர்ந்து எழுத முடியும்...’ என்று சொல்லிவிட்டாள் பச்சைப்புடவைக்காரி. அந்த அடிப்படை சிந்தனையில் ஆழமாக எழுதப்பட்டுள்ளது
ஜனனி என்ற அழகிய பெண், அன்பைச் சொல்லிக் கொடுக்கிறாள். அந்த கதைதான் தீண்டும் இன்பமாக மலர்ந்துள்ளது.
வரலொட்டியும், ஜனனியும் மாறி மாறி மனிதர்களின் மனதில் ஆழமாக விதைக்கும் விவசாயப் புரட்சியாக தீண்டும் இன்பம் பயணிக்கிறது.
-– சுமித்ரா தேவி