காரைக்கால் அம்மையாரின் யோக நெறிகளையும், பக்தி உணர்வுகளையும் ஆய்ந்து விளக்கும் ஆய்வுக்கட்டுரை நுால்.
இறைத் தொண்டை வாழ்வாக கொண்டவர், சைவநெறி பிறழாமல் யோக சித்தாந்த நெறியில் ஆழ்ந்த ஆன்மிகப் பாதையை தெளிவுற விளக்குகிறது. திருவாலங்காட்டுத் திருப்பதிகங்கள், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை பற்றிய குறிப்புரைகள் தரப்பட்டுள்ளன. தலபுராணம் வழியே பெற்ற தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யோகநெறி சார்ந்த யோக தத்துவங்கள், ஆசனங்கள், குண்டலினி யோகம், நுண்ணுடம்பு தத்துவம், உயிரின் தோற்ற நெறிகள் விளக்கப்பட்டுள்ளன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு