வாழ்க்கை தேடலில் சுழலும் பெண்ணை சுற்றி நடப்பதை கூறும் நாவல். அலுவலக வேலை, சந்தித்த மனிதர்களிடம் கற்றதை விவரிக்கிறது.
மற்றொரு பெண் தேவையின்றி பேசுகிறார். தேவை என்றால் மட்டும் பேசுபவர் கதாநாயகி. திருமண பந்தம் குழப்பத்தில் ஆழ்த்தியதை விறுவிறுப்பாக சொல்கிறது. நட்பு, பாசம், காதலை காட்டுகிறது.
முன் ஜென்மம் கதைபோல் தோன்றினாலும், மர்ம முடிச்சுகளை அவிழ்த்தபடி நகர்வதால் சுவாரசியம் கொடுக்கிறது. வாசிக்க உகந்த நாவல்.