ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 176, )
நோபல் பரிசு பெற்ற நாவலின் தமிழாக்கம். அனடோல் பிரான்சு மாபெரும் இலக்கிய மேதை, 1921ம் ஆண்டில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த நாவல் தான் இது!
தாயிஸ் என்பவள் ஒரு விலை மாது. அவளைத் திருத்தி நல்வழிப்படுத்தச் சென்றார் ஒரு பாதிரியார். பாதிரியாரின் உபதேசங்களைக் கேட்டு விலைமாது புனிதவதியானாள். ஆனால், பாதிரியாரின் மனம் பண்படவில்லை. விலைமாதின் பேரழகில் மயங்கி, அவளுக்கு அடிமையானார். பாதிரியார் என்ற புனிதத் தன்மையை இழந்து, உலகின் வெறுப்புக்கு ஆளானார். இது தான் இந்த நாவலின் மையப் பொருள்.மூல நூலின் சுவையை அப்படியே தரும் அருமையான மொழியாக்கம்.