அருணோதயம், 5/3, கவுடியாமடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்-192)
நூலில் வாழ்வின் உயர்வுக்கு தேவையான செய்திகளை தந்துள்ளார் ஆசிரியர். முதலில் பலவீனங்களை களைய வேண்டியது அவசியம். "உலகத்தில் தனிமனிதன் வாழ்க்கையில் முன்னேறி மிகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான ஒரே ஒரு நேர் வழி, தன்னுடைய பலம் ஒன்று என்பதை உணர்ந்து அதை முன்னிருத்தி உழைப்பதுதான். பலத்தை மேலும் பெருக்க நம்முடைய பலவீனங்களை கண்டு அவற்றை விலக்கித் தள்ள வேண்டும்'(பக்.10), என்ற செய்தி இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் அறிந்து கொள்ள வேண்டியது. இந் நூலை படித்து முடித்தால் பலவீனங்கள் குறைந்து பலம் பெறுவது உறுதி.