பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
பெர்லின் நகரின் இரவு வாழ்க்கையை ஒரு காரோட்டியின் கண்கள் வழியே சித்தரிக்கிறது பொ.கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள். இந்த இரவுகளைக் கடந்து செல்லும் மனிதர்களும் நிகழ்வுகளும் உருவாக்கும் மனச்சித்திரங்கள் வேடிக்கையும், வினோதமும் மன நெகிழ்ச்சியும் கொண்டவை. விலகி நிற்கும் ஒரு பார்வையாளனின் மொழியில் சொல்லப்படும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள் அதன் துல்லியமான புனைகதை மொழியால் பெரும் பரவசத்தை ஏற்படுத்துகின்றன.