நேரடியான காட்சிச் சித்திரங்கள், வழிப்போக்கனின் எளிய அவதானிப்புகள், அன்றாட வாழ்வின் உரையாடல்கள், வழியே கவித்துவப் பாசாங்குகள் ஏதுமற்று உருவாகும் முகுந்த் நாகராஜனின் மொழி நவீனத் தமிழ்க்கவிதை மரபில் புத்துணர்ச்சி மிக்க ஒரு தனித்த குரலாக உருக்கொள்கிறது. குழந்தைகள் உலகின் கபடமற்ற வசீகரத்தினூடே பயணிக்கும் இக்கவிதைகள் அந்த உலகின் பரிசுத்தமான இசையை நெஞ்சில் பெருகச் செய்கின்றன. 'அகி' தொகுப்பின் மூலம் பெரும் கவனம் பெற்ற முகுந்த் நாகராஜனின் இரண்டாவது தொகுப்பு இது.