கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
கிட்டத்தட்ட உலகை ஆண்டிருக்கிறார்கள் மாயன்கள். வானியல் ஆராய்ச்சிகள் செய்தார்கள். கணிதத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசியிருக்கிறார்கள். தமக்கென்று ஒரு பாதை. தமக்கென்று ஒரு திட்டவட்டமான வாழ்க்கை முறை. அதனாலேயே அவர்கள் தாக்கப்பட்டார்கள். சிறிது சிறிதாக அழிக்கப்பட்டார்கள். மத்திய அமெரிக்காவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்து, அழிந்த மாயன்களின் அதிசய உலகம் பற்றி நாம் தெரிந்து கொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். ஆனால் அதற்குள் அவர்கள் காணாமல் போயிருந்தார்கள். எஞ்சியிருப்பவை அடையாளங்கள் மட்டுமே. அந்த அடையாளங்கள் அனைத்தையும் சேகரித்து அளிக்கிறது இந்நூல்.