முகப்பு » பொது » சந்தேக நிவாரணி

சந்தேக நிவாரணி

விலைரூ.4000

ஆசிரியர் : நாராயண சாஸ்திரிகள்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
பக்கம் : 96
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.

மனிதர்களின் மனத்தில் அன்றாட வாழ்க்கை யில் தோன்றும் சந்தேகங்கள் எண்ணற்றவை. புறப்பொருள் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை நாம் பல விதங்களில் அறிந்து கொள்ளலாம். ஆனால், அகத்துக்கு ஒளிதரும் ஆன்மிகம் தொடர்பாக நமக்குத் தோன்றுகின்ற சந்தேகங் களைப் போக்கி, நமக்குத் தெளிவு தருவதென் பது யாரால் முடியும்? வேத சாஸ்திரங் களை நன்றாகக் கற்றுணர்ந்த ஒரு பண்டிதரால்தான் முடியும்! அமைதியான தோற்றத்தில் அருளொளி வீசும் கனிந்த ஞானியாக வீற்றிருக்கும் 87 வயது நிரம்பப் பெற்ற பெரியவர் பிரம்மஸ்ரீ பி.என். நாராயண சாஸ்திரிகள், கேள்விகளுக்குப் பதில் வடிவம் தந்திருக்கிறார். இவர் முன்னின்று நடத்திய கோயில் கும்பாபி ஷேகங்கள் பல நூறு. 1944ல் பற்பல சாஸ்திர விற்பன்னர்களுக்கிடையே, தகுதியின் காரண மாக, காஞ்சி காமாட்சியம்மன் ஆலய ஸ்ரீ சக்ர கும்பாபிஷேகத்துக்கு, ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமி களால் தலைமைச் செய்முறையாளராக நிய மிக்கப்பட்டவர். முந்நூறுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர் களை உருவாக்கியவர். இந்து மகா சமுத்திரத்தில் பயணிக்கும் நமக்கு அவர் பதில்கள் கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us