பாரதி புத்தகாலயம், 412, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை: 600 018. ( பக்கம்: 72)
புறநானூற்றில் 398 செய்யுள்கள் உள்ளன. அவற்றில், எந்தெந்த பாடல்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில், ஆசிரியர் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். சங்க இலக்கியத்தைச் சேர்ந்த புறநானூறு நூல் விளக்கமாக இருந்தாலும், இக்காலகட்டத்தில், அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான நடையில் விளக்கியுள்ளார். நமது மூதாதையரின் வாழ்க்கை யை, பண்பாட்டை, தத்துவத்தை அறிந்து கொள்ள இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.