ஒரு பக்கம் கணினி வரவால், இஷ்டப்படி பலரும் நூல் எழுதி சந்தையில் வெளியிடும் நேரத்தில், ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டை கோவிலூர் ஆதினகர்த்தர் வெளியிட்டிருக்கிறார். இவை மூல நூல்களின் செம்பதிப்பாகும். நூலை ஆக்கிய மாபெரும் இளங்கோ, சாத்தனார் பெருமையை தமிழில் தவறுகள் இன்றி, அறிய உதவும் நல்ல பணி. உரை இன்றி மூல நூலைப் படிக்கும் பான்மை இப்போது குறைந்து வருகிறது. அதை மாற்றி தமிழ் தழைக்க, அறம் சிறக்க எடுக்கப்பட்ட நல்ல முயற்சி இது.
நூலின் இறுதியில், 30க்கும் மேற்பட்ட பக்கங்களில் சொல், தொடர் விளக்கம் தரப்பட்டிருப்பதால், எளிதில் படிக்கலாம். தமிழை சுவைக்கலாம்; அறத்தையும் வளர்க்கலாம்.
பாண்டியன்