இந்த நூல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், தமிழகத்தின் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடைய ஜாதிகளான, தேவர், வேளாள கவுண்டர், வன்னியர், நாடார் ஆகிய ஜாதிகள் குறித்தும், இரண்டாவது பகுதியில், வேட்டுவர், ஆசாரி, போயர், வண்ணார், நாவிதர், குலாலர், மீனவர் ஆகிய எளிய ஜாதிகளின் தொன்மை, பழக்க வழக்கங்கள் போன்றவையும், அந்த மக்களின் தொன்மை, கோவில் விழா கலை மூலம், உயர் ஜாதியினர், தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறு நிலை நாட்டுகின்றனர் என்பது குறித்தும் விரிவாக அலசும் நூல். மானிடவியல் ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர் மட்டுமின்றி, வரலாற்றை விரும்புவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.