ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியரின், 20 நாடகங்களை தமிழில் தந்துள்ளார் நூலாசிரியர். வெனிஸ் நகரத்து வியாபாரி, ரோமியோ – ஜூலியட், ஹேம்லெட், ஜூலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்ற புகழ் பெற்ற நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலில், சுபமுடிவு நாடகங்கள், சோகமுடிவு நாடகங்கள் என்ற இருபிரிவிலான நாடகங்களை மட்டுமே ஆசிரியர் கொடுத்திருக்கிறார்.
நாடகங்களின் தலைப்புகளை அப்படியே நேர்மொழிபெயர்ப்பாக கொடுக்காமல், அவற்றின் உள்ளடக்கத்திற்கு ஏற்றபடி தமிழிலேயே தந்திருக்கிறார் நூலாசிரியர். கதைகளை எளிய தமிழில் விறுவிறு நடையில் மொழிபெயர்த்திருக்கிறார்.