தேனி மாவட்டம் மேற்கு போடி, மலைகள் அமைந்த இடத்தில் 1,500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் (ஐ.என்.ஓ.,), பற்றிய குறிப்புகளையும், தேவைகளையும் இந்த நூல் விரிவாகக் கூறுகிறது.
பொது வாசகர்களைக் கருத்தில் கொண்டு, துகள் இயற்பியலில் காணப்படும் அடிப்படைக் கூறுகளை விளக்கி, நியூட்ரினோ துகள்களை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரபஞ்சம் உருவான காலத்திலேயே அந்த துகள்கள் உருவாகியுள்ளன என்றும், அவற்றின் தன்மையும் விளக்கப்பட்டுள்ளது.
பூமியின் வளிமண்டலத்தில் காணப்படும், பற்பல துகள்களிலிருந்து நியூட்ரினோ துகள்களை எவ்வாறு பிரித்தெடுக்கலாம் என்ற தகவல்கள், தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அந்த துகள்களைப் பற்றிய ஆய்வுகள் ஏன் அவசியம் என்றும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நோக்குக்கூடத்தை அமைத்தால் பல பிரச்னைகள் ஏற்படும் என்று கூறும் தரப்பினரின் பல்வேறு கேள்விகளுக்கும், தகுந்த முறையில் இறுதி அத்தியாயத்தில் கேள்வி – பதில்கள் மூலம், அருமையாக நூலாசிரியர் விவரித்துள்ளார்.
பை சிவா