சுயசரிதை போல எழுதப்பட்டுள்ள கதை இது. வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் உட்கொண்டு, அதன் நிறைகள் மற்றும் அவலங்களை தத்ரூபமாகச் சித்திரிக்கும் மகத்தான நாவல். ஒரு வாராந்திரத் தொடராக வந்த இந்நூல், 1972ல், வங்கமொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. நூலாசிரியர், (1920 – 1985). 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த வங்க எழுத்தாளர்களில் ஒருவர்; பிரபல பத்திரிகையாளரும் கூட.
புதுமையான வர்ணனைகள் இந்த நாவலுக்கு பரிபூரணமான கவர்ச்சியை அளித்திருக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிய, வீரியமுள்ள கண்ணோட்டங்கள், நாவலை அணிசெய்கின்றன. கதை என்று பார்த்தால் அதிக சம்பவங்கள் இல்லை. ஆனால், கண்ணோட்டங்களின் கட்டுமானம், நாவலுக்கு பலம் சேர்க்கிறது. புவனா நடராஜன், வங்க மூலத்தில் இருந்து அருமையாக மொழிபெயர்த்து இருக்கிறார்.
‘நகரத்து பழக்கங்கள், நடையுடை பாவனை, நடிப்பு இவை எல்லாம், ‘மேக்கப்’ போல. போட்டுக் கொள்ள அதிக நேரம் ஆகாது; ஒரேயடியாக முகத்தையே மாற்றி விடும். ஆனால், அதைக் கலைத்து விட்டு, முதலில் இருந்த முகத்துக்கு மாறுவது தான் கஷ்டம்.’ (பக். 175)