பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல் விருதின் யுத்த அரசியல், சங்ககால ஜாதி அரசியல், மதிப்பெண் அரசியல், துவரம் பருப்பின் அரசியல் என ஒவ்வொரு கட்டுரையிலும், ‘அரசியல் மொழி’ என்று ஒன்றை பின்புலமாகக் கொண்டு இன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முன்னாள், ‘உன்னதம்’ இதழாசிரியர்.
‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/ இந்நான் கல்லது குடியும் இல்லை’ (புறம்: 335. 7–8) என்னும் பாடல் ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களுக்கு வலுவான சான்றாக இருக்கிறது (பக். 94) என்று சமூக அவலத்தைச் சுட்டுவதுமாக, ஒவ்வொரு கட்டுரையும் சறுக்கிவிழும் இந்தியனைத் தூக்கிவிட, விழிப்படையச் செய்யத் தூண்டுவதாக அமைந்தது.
– பின்னலூரான்