மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது. படிக்க படிக்க சுவை கூட்டக் கூடிய பாகவதத்தை, குழந்தைகளுக்கு புரியும் வகையில், சிறு சிறு கதைகளாக ஆசிரியர் தந்துள்ளார். இதை, குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதனால், அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்; நம் கலாசாரம், புராணங்கள் மீதும் பற்று ஏற்படும். இதனால், அவர்கள் மனதில் ஒழுக்க நெறி மேம்படும். ஆண்டவன் மீது பக்தி அதிகரிக்கும்.