நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் சீரழிவை துயரத்துடன் சொல்லும் நாவல். சமூக ஏற்றத்தாழ்வுகள், குடும்பப் பிரச்னைகள், பாலியல் குளறுபடிகள், சிறு வயதினரின் மனச்சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.
குறிப்பாக, இஸ்லாமிய பேச்சு வழக்கும், வாழ்க்கை முறையும் வட்டார மொழியில் பேசப்பட்டிருப்பது இந்த நாவலுக்கு கூடுதல் பலம். இதனுடன் தமிழக அரசியல் வரலாறும் பேசப்படுகிறது.
ஆனால், அரசியல் வரலாற்றைத் திணித்தது போலவும் ஆண்டு, தேதி போன்ற சில அதிகப்படியான தகவல்களும் தேவையில்லாததாக தோன்றுகின்றன. இந்த பரபரப்பான ஹைடெக் காலத்திலும் காமம் பற்றிய சரியான புரிதல்கள் இல்லை.
அவற்றை மிகவும் மெலிதாக சரியான விதத்தில் நகர்த்தி உணர்வுகளை வலியோடு பேசியிருக்கிறார். அவற்றை இன்னும் கூடுதலாகச் சொல்லியிருக்கலாம். கதையைச் சொல்லும் விதத்தில் அதிகம் ரசிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய உணர்வுகளைச் சொல்லும் விதம் அழகாகப் பின்னப்பட்டு அதைக் கதைப்போக்கின் முக்கிய அம்சமாகவும் மாற்றியிருக்கிறார்.
–மனோ