யுனெஸ்கோவின் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில், இந்தியாவின் தோட மொழியும் உள்ளது. நீலகிரியை பூர்விகமாகக் கொண்ட பழங்குடியின மக்களாகிய தோடர்கள், பல்வேறு சமுதாய, பொருளாதார பழக்க வழக்கங்கள், சடங்குகளில் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது இந்நுால். இந்த இனத்தவர்களிடையே சாதி ரீதியான சமூகப் படிநிலை இருப்பதை பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்நுால்.