கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேஷியாவுக்கு சென்று வந்ததையும், மேற்குத் திசை நாடான உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவுக்கு சென்று வந்ததையும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், உதவிய நண்பர்களையும் நுாலாசிரியர் நினைவுகூர்கிறார். அயல்நாடுகளுக்கு செல்லும்போது கண்டோம், களித்தோம் என்று வராமல், தன் உயர்ந்த நோக்கங்களையும், கருத்துகளையும் அங்கே பதிவு செய்திருப்பது மிகவும் போற்றத்தக்கதாகும்.