சிந்தனைக் கனிகளை அள்ளித்தருவதில் வெ.இறையன்பு முதன்மையானவர். அவர் பார்வையில், நிதர்சன உண்மைகள் அணிவகுக்கின்றன.
உளவியல் பார்வையுடன் ஊடுருவி, வாழ்வியலுடன் இணைக்கின்றன. மந்திர எழுத்துகள் மலைக்க வைக்கின்றன.
மனம் எல்லாம் மகிழ்ச்சி, பகட்டும் எளிமையும், திருமண பந்தம், நயத்தகு நாகரிகம், பெருந்தன்மை பேணுவோம், வளமாக்கும் பொழுதுபோக்கு, நீர்க்குமிழி நினைவுகள், விபத்தும் விளைவும், பயம் தவிர்ப்போம், வெற்றி நிச்சயம் என, 10 தலைப்புகளில் வாழ்வுப் புதிர்களை புரிய வைக்கிறார்.
‘திருமண பந்தம்’ பற்றிய சொல்லோவியத்தை, வாழ்வியல் இலக்கியமாக செதுக்கியுள்ளார். நாகரிகம், பெருந்தன்மை, பொழுதுபோக்கு போன்றவற்றின் விளக்கம் வியக்க வைக்கிறது.
அற்புதமான நகைச்சுவையுடன், எழுதுகோலில் சிலந்திவாய் நுாலாக கற்பனை வந்து கொண்டே இருக்கிறது. அது, சிந்தனை வலையில் விழ வைக்கிறது.
– முனைவர் மா.கி.ரமணன்