பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மவுனி, க.நா.சுப்ரமண்யம், லா.ச.ரா., சி.சு. செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும், 20 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நுால்.
பல கால கட்டங்களில், நுால், இதழ்களில் வெளியானவை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றை வெளிப்படுத்தும் மதிப்பீடாக அமைந்துள்ளது நுாலின் முன்னுரை. 21ம் நுாற்றாண்டு வாசகர்கள், முந்தைய படைப்பாளர்களையும், படைப்பின் போக்கையும் தெரிந்து கொள்ள உதவும்.
– முகிலை ராசபாண்டியன்