காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால். செய்யும் தொழிலே தெய்வம் எனும் கருத்தை வலியுறுத்தும் கதையில் துவங்குகிறது. ஒற்றுமையால் அனைத்து வகையிலும் சிறந்த ஊரைக் கனவு காணும் இளைஞனின் சமூகப் பொறுப்பு, ஒரு கதையில் சொல்லப்பட்டுள்ளது.
இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வாழ்க்கையை தியாகம் செய்து முதிர்ந்து விடும் இளைஞனின் திருமண ஏக்கம் மற்றொன்றில் வெளிப்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனுக்குள் சுரக்கும் அன்பின் ஊற்று போன்ற நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கதைகள்.
ஒவ்வொரு கதையிலும் மாறுபட்ட களத்துடன், சிறந்த இல்லறத்துக்கான நல்லிணக்க உணர்வுகளையும், அணுகுமுறைகளையும் இயல்பான உரையாடல்களோடு வெளிப்படுத்தும் நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு