பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் உள்ளன. தமிழில் சிறந்த கூட்டு முயற்சியாக உள்ளது. குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலான செயல்.
சிறுவர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளே கதைகளாக அமைந்துள்ளன. அவற்றுக்கு, படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் பல மிகவும் உயிரோட்டமாக உள்ளன. குழந்தைகளின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த தொகுப்பு. பள்ளியில் பல நிலையில் படிக்கும் சிறுவர் – சிறுமியர், அவர்களின் புரிதலுக்கு ஏற்ப எழுதியுள்ளனர். பாராட்டத்தக்க முயற்சி.