கம்பராமாயண பாத்திரப் படைப்புகளை அடியொற்றி, 25 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். கம்பரின் தலைமைப் பண்பு சிறப்புற விளங்குவதை வெளிக்கொணர்கிறார். ராமாயணப் பாத்திரப் படைப்புகளின் தன்மையை நவீன மேலாண்மை கருத்துகளோடும், தமிழ் பண்பாட்டோடும் கலந்துரைக்கிறார். அயராத உழைப்பு, தன்னலமற்ற தன்மை, துணிவு, முயற்சி அர்ப்பணிப்பு, வைராக்கியம் எனப் போராடினால் தலைமைப் பண்பை அடைய முடியும் என்கிறது.
தலைமையின் நான்கு வகைகளாக சர்வாதிகாரம், ஜனநாயகம், கட்டுப்பாடற்ற தலைமை, தந்தை வழி தலைமை என வரையறை செய்துள்ளார். ‘கூழைக் கும்பிடு’ சொல் பயன்பாடு, தலைமையில் உள்ளவர்கள் நன்குணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுடன், நான்கு வகைகளையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்த தலைமை என்கிறது. பதின் பருவத்தினருக்கு மிகவும் தேவையான பெட்டகம். புதிய கருத்துகளுடன் தலைமைப் பண்பை வழங்கும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்