இந்திய சமூக வரலாற்று நிகழ்வுகளின் வாயிலாக உள்ளதை உள்ளபடி உணர்த்தும், 148 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கட்டுரைகள் என்று சொல்வதை விடவும் குண்டூசிகள் என்று சொல்ல வேண்டும். நிகழ்வுகள் ஒவ்வொரு விதமாகத் துவங்கப்பட்டு வெவ்வேறு விதமாக முடிகின்றன. எனவே தான் நிகழ்வுகள் பிறழ்வுகள் என்று தலைப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையையும் சின்ன சின்ன சிற்பங்களைச் செதுக்குவது போல் செதுக்கியுள்ளார். கட்டுரைகளின் தலைப்பை மேலே எழுதுவர். இவர் கட்டுரையை எழுதிவிட்டு, தலைப்பை முத்திரை வாசகம்போல் இறுதியில் சேர்த்துள்ளார். மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள கட்டுரைத் தொகுப்பு.
– முகிலை ராசபாண்டியன்