சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும், மக்கள் வாழ்வியலையும் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கிறது.
வாங் – குங் என்னும் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த சீன மருத்துவருக்கும், அவரது பேத்தியான சியோ – சென் என்னும் மருத்துவருக்கும் இடையே உள்ள இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.
பழைமையும், புதுமையும் கைகோர்த்து நிற்பதாக நாவல் நிறைவடைகிறது. சீனாவில் படைப்பிலக்கியம் எவ்வாறு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எளிய தமிழ் நடையில் மொழிபெயர்ப்பு அமைந்திருப்பதால் கவரும்.
– முகிலை ராசபாண்டியன்