சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சின்ன சின்ன கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 100 கதைகள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு உள்ளன. ‘ஆசிரியர்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை உள்ளது. அதன் கரு பாராட்டுக்குரியது. மாணவர்கள் எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், பைலட் என உயர்வதை பெருமையாக சொல்கின்றனர்.
ஒரு மாணவன் மட்டும், ‘டாக்டர், இன்ஜினியரை உருவாக்கும் ஆசிரியர் ஆவேன்...’ என்கிறான். சிந்திக்க வைக்கும் கருத்து. சிரிக்க வைக்கும் கதைகளின் கூட்டாஞ்சோறாக உள்ளது. – சீத்தலைச் சாத்தன்