மக்களால் போற்றப்படும் தேசத் தந்தை காந்தியடிகள், ஈ.வெ.ரா., வாழ்க்கை மற்றும் பொது நலத் தொண்டுகளை ஆராயும் நோக்கில் ஒப்புமையாக எழுதப்பட்ட நுால்.
இருவருக்கும் உள்ள தனிப்பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரம் தவறாமை, சிக்கனம், மேடைப் பேச்சு, மொழிப்பற்று, மத நல்லிணக்கம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். பெண் விடுதலையில் காந்தியடிகள் மற்றும் ஈ.வெ.ரா., செய்த புரட்சிகள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னல்களைப் போக்க இறுதிவரை போராடியதால், புத்தரோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது . காந்திக்கும், ஈ.வெ.ரா.,வுக்கும் இருந்த தனித்தன்மையான சிக்கனம் தனித்தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. இருவரையும் இரண்டு துருவங்களாக்கும் பார்வையை மாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ள நுால்.
– முகில் குமரன்