செம்மொழி என்ற தகுதியை தமிழ் பெற்றபோது, அது தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஆற்றிய உரை மற்றும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு நுால்.
செம்மொழிக்கான தகுதியை உறுதி செய்து மத்திய அரசு வெளியிட்ட ஆணை, ‘தமிழ் செம்மொழி ஆவணம்’ என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்து, செம்மொழி குழுவில், தமிழறிஞர்களை சேர்த்தது குறித்த அறிக்கை உள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலக திறப்பு விழாவில், கருணாநிதி ஆற்றிய உரை முழுதுமாக இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து அவர் எழுதி கடிதங்கள் தரப்பட்டுள்ளன.
தமிழ் செம்மொழிக்கான தகுதியை பெற்ற போது நடந்த நிகழ்வுகளை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆவணங்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– ஒளி