தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களைப் பற்றி தெளிவாக விவரிக்கும் நுால். சென்னையில் பார்க்கத்தக்க முக்கிய இடங்களையும் விவரித்துள்ளது. மாமல்லபுரம், தலசயன பெருமாள் திருக்கோவிலில், மிருக உருவங்களாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. திருக்கழுகுன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வலம்புரி சங்கு தோன்றும் நிகழ்வு போன்ற அரிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
நாகர்கோவில், நாகராஜா கோவில் பாம்புகள் மக்களைக் கடிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்கோவிலுாரில் பெருமாள், 35 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்டவர் என அரிய தகவல் தரப்பட்டுள்ளது. இறுதியாக நவக்கிரக திருக்கோவில்கள் குறித்து தெரிவித்திருப்பது பெருமை சேர்க்கிறது. ஆன்மிக அன்பர்களுக்கு உதவும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து