இயற்கை மருத்துவத்தின் சிறப்புகளையும், அலோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகளையும் விளக்கும் நுால். முதலில் இயற்கை வைத்திய பயன்களைக் குறிப்பிடுகிறது. அலோபதி மருத்துவர்கள் நோயை குணப்படுத்துவதில்லை என சாடுகிறது. எந்த நோயையும் அலோபதி மருத்துவர்கள் தீர்ப்பதில்லை. மாறாக, நோய்களால் மனிதர்கள் அடையும் வேதனையை தற்காலிகமாக மாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த நோய் உடலிலே இருந்து, மறுபடியும் வெளிப்படும் என எச்சரிக்கிறது.
இயற்கை வைத்தியத்தில் பூரண குணமடைய வைக்கும் வழிகள் உள்ளன என தெளிவுபடுத்துகிறது. அத்துடன் இயற்கை மருந்துகள் தீங்கற்றவை என்றும், அலோபதி மருத்துவத்தில் அளிக்கப்படும் மருந்துகள் நஞ்சாக உள்ளதாகவும் விளக்கம் தருகிறது. இயற்கையான பழம், காய்கறி, கீரை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளது. இயற்கை வைத்தியத்தில் நன்மையே கிட்டும் என விளக்கும் மருத்துவ நுால்.
– முகில் குமரன்