கொரோனா என்னும் கொடிய நோய் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நுால். நுண்ணுயிரி பற்றிய ஆய்வுகளின் துவக்கம், வளர்ச்சி நிலை முதலானவற்றை முதல் அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
கொரோனாவின் துவக்கம் பற்றியும், அது பரவிய விதம் குறித்தும், உலகை அச்சுறுத்திய தன்மை குறித்தும் இரண்டாவது அத்தியாயம் எடுத்துரைக்கிறது. கொரோனா நுண்ணுயிரி நுண்ணாயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா, இது பரப்பப்பட்டதா, அரசியல் காரணங்களுக்கு உட்பட்டதா என அடுத்த அத்தியாயம் விவாதிக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம், தடுப்பூசி ஆய்வுகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. கொரோனாவின் இரண்டாவது அலையில் தாக்கம் மிகுதியாக இருந்த காரணத்தை அலசுகிறது. நுண்ணுயிரிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வோருக்கு உதவும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்