வட்டார இன மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சடங்குகள், தெய்வ வழிபாட்டு முறைகளை பதிவு செய்துள்ள நுால். ராவணன், பார்வதி தேவியின் சொரூபமான மனோன்மணியிடம் வரம் பெற்றதான நிகழ்வுகள் வாய்மொழியாக வழங்கப்பட்டதை விளக்குகிறது. தெய்வம், வீட்டு அம்மை என வழங்கப்படுவது, தெய்வம் உறையும் கோவில் அமைப்பு, பூசை முறைகளையும் ஆராய்கிறது.
பலியிடல், எடை வழங்குதல் என்று விரிகிறது. ராவணேஸ்வரன் பூசை விதி பற்றிய கதைப்பாடல், ராமாயணக் கதையிலிருந்து மாறுபட்டுள்ளது. பத்திரகாளியின் பிள்ளைகளாகக் கருதப்படும் மக்களால் வழிபடப்படும் மனோன்மணியம்மையுடன், இந்த கதைப்பாடல் தொடர்பு குறித்த விபரங்கள் உள்ளன. காளி பக்தனாக ராவணன் இடம்பெற்றிருப்பது புதிய செய்தியாக உள்ளது.
–
ராம.குருநாதன்