பல தலைப்புகளில் பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பந்த்’ என்ற தலைப்பில், ‘இது அன்றாடங் காய்ச்சிகளுக்கு அனுதாபம்... அரசியல்வாதிகளுக்கு ஆதாயம்... என பாடியுள்ளார். இந்த கவிதையில் கடைசி வரி, ‘வீடு வந்தால் மனைவி அறிவிப்பது மூன்று நாள் ‘பந்த்...’ என்று உள்ளது.
‘தரமான சாலை வாகனங்களின் சேவை’ என்ற மனக்குமுறல் கவிதை ஆகியுள்ளது. ‘ஸ்டிக்கர்’ பொட்டு பெண்களின் நெற்றியில் இருப்பதை விட, குளியலறையில் அதிகமாக இருப்பதாக பாடுவதும் சுவாரசியம், அரசியலில்தான் எத்தனை உறவுமுறை...? தாத்தா, மாமா, அண்ணா, அம்மா என உறவுக்கு சொந்தக்காரர் பெயர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ‘ஊமையாய் இருப்பதே உத்தமம்’ என்கிறது. எழுத்துக்களில் கருத்தின் அழுத்தம் அதிகம்.
–
சீத்தலைச் சாத்தன்